சென்னை: தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உணவு டெலிவரி உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களுக்காக புதிய நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி புதிய நல வாரியம் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.