இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை எளிதாக கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடியும். 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்த முடியும். டிரோன்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை, போட்டோவை வைத்து கண்டறிய முடியும். தப்பி செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை போட்டோ, வீடியோ எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்துவது கோவையில் தான் முதல் முறையாக நடக்கிறது’’ என்றார்.