தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் இலங்கை அரசின் கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் அபராதத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், சிறையில் இருந்த 5 தமிழக மீனவர்களை மொட்டையடிக்க கட்டாயப்படுத்தி, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்