Thursday, September 19, 2024
Home » தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் இலங்கை அரசின் கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் இலங்கை அரசின் கொடூர செயல்களுக்கு முற்றுப்புள்ளி: ஒன்றிய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

by Karthik Yash

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் அபராதத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், சிறையில் இருந்த 5 தமிழக மீனவர்களை மொட்டையடிக்க கட்டாயப்படுத்தி, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

fifteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi