சென்னை: தமிழ்நாட்டிள் இளைஞர்களை உலகின் தலைசிறந்தவர்களாக ஆக்குவதே எனது நோக்கம் என நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நான் முதல்வன் திட்டம் காரணமாக அமைந்துள்ளது எனவும் கல்வி, அறிவாற்றலில் தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள் முன்னேறக் கூடிய வகையில் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் எனவும் முதல்வர் பேசினார். மேலும் சென்னையில் “கலைஞர் 100” என்ற இணையதள பக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.