சென்னை: டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்புக்காக தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதரப்பாக்கத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் வோல்டாஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து வரும் நிலையில் நடப்பாண்டிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மாதரப்பாக்கம் வோல்டாஸ் தொழிற்சாலையில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.