சென்னை : தமிழ்நாட்டில் டி.ஏ.பி, யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்பா, தாளடி நடவு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றும் உழவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.