விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலே சான்று என்று குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை என்று தெரிவித்தார்.