தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவே வெயில் சுட்டெரிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னையில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் செப்டம்பர் மாதத்தில் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். 22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் நேற்று சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது.

Related posts

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!!

இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது

குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி