சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதியளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் மின்தடை இருக்காது எனவும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.