சென்னை : தமிழ்நாட்டில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நவ.28 முதல் டிச.1ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.40 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வுக்கான வினாத்தாள் www.exams.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.