சென்னை: தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி பறவைகள் சரணாலயம் ஆகியவற்றின் மூலம், நம் தமிழ்நாடு இப்போது 18 ராம்சார் தளங்களை கொண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான சாதனை, தமிழ்நாடு வனத்துறையின் முயற்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான திராவிட மாடல் ஆட்சியின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.