சென்னை : தமிழகத்தின் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.