:டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி முதல் அடுத்த 4 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.