Thursday, July 4, 2024
Home » உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு ஜனாதிபதியின் ‘சிறந்த செயல் திறன் விருது’: முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு ஜனாதிபதியின் ‘சிறந்த செயல் திறன் விருது’: முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

by Karthik Yash
Published: Last Updated on

சென்னை: பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்துக்கு சிறந்த செயல் திறன் விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இதை அதிகாரிகள், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். புதுடெல்லியில் கடந்த 5ம் தேதி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக உணவு திருவிழா நிகழ்ச்சியில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்கான விருதினை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழ்நாட்டிற்கு வழங்கினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் டெல்லியில் வழங்கப்பட்ட விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

You may also like

Leave a Comment

eighteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi