கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 5 நாட்கள் நடந்த போட்டியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் முதல் இடம்பெற்றனர். இரண்டாம் இடத்தை தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்ளிட்ட 12 பதக்கங்கள் பெற்றது. மேலும், ஒட்டுமொத்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை பிடித்தது.
அதனை தொடர்ந்து நேற்று துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.