தமிழகத்தில் 24 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம்… லிஸ்டில் யார், யார் தெரியுமா?

சென்னை : தமிழகம் மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று பிறப்பித்த உத்தரவு:

*சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பி எஸ். சக்தி கணேசன், சென்னைப் பெருநகர உளவுத்துறை துணை ஆணையராக நியமனம்.

*மதுரை தென் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பி சுஜித் குமார், பெருநகர சென்னை காவல்துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம்.

*ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் எஸ்பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமனம்.

*சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*ராமநாதபுரம் கடலோர காவல் படையின் எஸ்பி டி.என்.ஹரிகிரண் பிரசாத் மயிலாப்பூர் துணை ஆணையராக நியமனம்.

*திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கே.கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*திருநெல்வேலி கிழக்கு சரக துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்பி புக்யா சினேகா பிரியா, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

*சென்னை பூக்கடை சரக துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கவுதம் கோயல் சேலம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன், நாகை மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*விருதுநகர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான், கரூர் மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*நீலகிரி மாவட்ட எஸ்பி பி.சுந்தரவடிவேல், சென்னை பூக்கடை சரக துணை ஆணையராக நியமனம்.

*சென்னை காவல் தலைமையகத்தின் உதவி ஐஜி டி.கண்ணன், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*தாம்பரம் காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி, கோயம்பேடு சரக துணை ஆணையராக நியமனம்.

*மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக நியமனம்.

*கரூர் மாவட்ட எஸ்பி கே.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னைப் பெருநகர பாதுகாப்பு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஷ்வரன், தருமபுரி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் பி.ஆர்.ஸ்ரீநிவாசன், தென்காசி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

*தமிழ்நாடு பால் கூட்டுறவு கழக ஊழல் கண்காணிப்பு எஸ்பி எஸ். மேகலினா இடென், சென்னை காவல்துறை தலைமையகத்துக்கும், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர்.

*பெருநகர சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையர் டி.ரமேஷ்பாபு, சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்