சென்னை: தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதி கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற வழக்கமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.