முற்றிலும் பேட்டரியால் இயங்கும் இந்த படகு மற்ற படகுகளை காட்டிலும் குறைந்த சத்தத்துடன் செல்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், மூன்று அல்லது நான்கு சவாரி மேற்கொள்ளலாம். இந்த படகில் 5 பேர் பயணிக்கலாம். வட்ட வடிவில் ஒரு டைனிங் டேபிள் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த படகில் அமர்ந்தபடியே தேநீர் அருந்தலாம். சிற்றுண்டியும் உண்ணலாம். இந்த படகில் 5 பேர் பயணிக்க தற்போது ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் ஆகியவற்றை இலவசமாக சுற்றுலா துறை வழங்குகிறது. இந்த படகு தற்போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.