தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: லாரி தொழிலை பாதுகாக்க தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் 7 லட்சம் லாரி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றும் வகையில், தமிழகத்தில் காலாவதியான 26 சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசுக்கு முதல்வர் கோரிக்கை வைக்க வேண்டும். தமிழகத்தில் செங்கல்பட்டிலிருந்து மீஞ்சூர் வரை 60 கி.மீக்கு 6 சுங்கச் சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாதவரத்திற்கு 5 சுங்கச் சாவடிகள் உள்ளன. சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும். இதே கோரிக்கை மனு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு