மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில் நந்தவனங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத் துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் உள்ள நந்தவனங்களைப் பராமரிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.