அதிகபட்சமாக நீலகிரி, நாமக்கல், கோவை, மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.
மேலும் இன்று முதல் 6ம் தேதி வரையில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.