சென்னை : தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்து நேரடி விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு என்பதை எடப்பாடி பழனிசாமி காட்ட வேண்டும் என்று திருவள்ளூர் பெரிய பாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.