அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை விசாரிக்கும் அமைப்பான லோக் ஆயுக்தா செயல்படுகிறது. இந்நிலையில் அதன் தலைவராக செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டம் 2018ன் படி, ராஜினாமா அல்லது இறப்பு உள்ளிட்ட காரணமாக தலைவர் பதவியில் காலியிடங்கள் ஏற்பட்டால் அதற்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அக்குழுவின் மூத்த உறுப்பினர் தலைவராக செயல்படலாம். அதன்படி லோக் ஆயுக்தா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் தலைவராக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.