சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த அமைதிப் பூங்கா, சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக விளங்குகிறது, வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை, குற்றச் சம்பவங்களுக்கும் முன்விரோதமே காரணம்” எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.