தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் ஆர்.என்.ரவி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடல்

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் ஆளுநர் திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளதா? என்று வைகோ கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சரின் பரிந்துரையின்றி ஒரு அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு