சென்னை: தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பின்றி அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஒரு சில போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பாதிப்பு இல்லை எனவும் முதல்வரின் அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.