சென்னை : நீர்நிலைகளை பராமரிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டங்களில் 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை என்ற அடிப்படையில் ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.