எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு 60 நாட்கள் நீட்டிப்பு : தொழிலாளர் நலத்துறை

சென்னை : தொழிலாளர் நலத்துறையின் இணையதளத்தில் எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு ஆகஸ்ட் 31, 2024 வரை 60 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் இணையதள சேவையில் தற்போது வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துறையின் இணையதளத்தில் எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு, ஜூன் 30, 2024-ல் முடிவடைகிறது. இந்நிலையில் மேற்படி கால வரம்பு ஆகஸ்ட் 31, 2024 வரை 60 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.மேற்படி கால நீட்டிப்புக்கு, எவ்வித கால தாமதக் கட்டணம் (Over Due Fees) வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!