டெல்லி: தமிழ்நாடு வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பாக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “பாதிப்பு, நிவாரணம் போன்ற பணிகளை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.