தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 307 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிறிய ரக ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மோதுவதற்காக விரட்டினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ரோந்து வந்து அச்சுறுத்தியதால், மீனவர்கள் போதிய அளவு மீன்பிடிக்க முடியாமல் நேற்று காலை கரை திரும்பினர். ஏராளமான ஒரு படகுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது‌.

 

Related posts

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!