இலங்கை அரசின் இதுபோன்ற அத்துமீறிய செயல் ஒருவிதமான பதற்றத்தை தமிழக மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும், மீனவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும், மாயமான மீனவர் ராமச்சந்திரன் உடலை மீட்டெடுத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.