சென்னை: அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு: தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்தியிருக்கும் இலங்கை கடற்படைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.