இதுகுறித்து மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. பாஜ அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன. இதை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற 77 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் விவசாய அமைப்புகளோடு கலந்துபேசி அன்றைய தினம் அனைவரும் பச்சை துண்டை அணிந்து பாரத் பந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றி பெற செய்ய வேண்டும்.