தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.2ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 முதல் 5 வரை நடைபெறவுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொதுப் பிரிவினருக்கு ஆக.7ல் கலந்தாய்வு தொடக்கம்:

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தொடங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது. பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆக.7ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு செப்.26 முதல் 29 வரை நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அக்டோபர் 3ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் ஜூலை 12ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30 வரை நடக்கிறது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்