அது எதற்கு என்றால் இப்பொழுது தேர்தல் வந்துவிட்டது என்ற காரணத்தினால் தமிழகத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் வெள்ளத்தால் பாதித்த குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து வருகிறார். அதற்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி வழங்க கேட்டார். ஒரு பைசா கூட ஒன்றிய நிதியிலிருந்து வழங்கவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கேட்டால் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என்று கேட்கிறார். நீங்கள் ஏடிஎம் மிஷின் கிடையாது. நீங்கள் என்ன உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா? கொடுக்கிறீர்கள். நான் தமிழக மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்து எங்கள் மக்களுக்கு நிதியை வழங்குங்கள் என்று கேட்டேன். அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை என்று கூறினார். நான் இப்போது சொல்கிறேன் உங்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதையும் கொடுக்கிறேன், எங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுங்கள், நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தேன்.
ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. மக்களுக்காக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கோயம்புத்தூரில் இந்தியாவிலேயே முதல் முதலமைச்சராக கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகள் நலமாக இருக்கிறார்களா? என நலம் விசாரித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்று முன்வந்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருந்த மக்கள் நீங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார். அப்போது வந்த ஆம்புலன்ஸ்சுக்கு வழி விட வேண்டும் என்று கூறி, அதிக அளவில் கூட்டம் உள்ளதால் தனது பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று அறிவித்து விட்டு சென்றார்.