மதுரை திலகர் நகர் உதவி கமிஷனர் மகேஷ், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பியாகவும், மதுரை கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி, மதுரை திலகர் நகர் உதவி கமிஷனராகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பி தமிழ்மாறன், அரியலூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி, கடலூர் மாவட்டம் நெய்வேலி டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பி நாகராஜன், மதுரை கோயில் நகர உதவிக மிஷனராகவும், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணக்குமார், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பால் ஸ்டீபன், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், காஞ்சிபுரம் க்யூ பிரிவு டிஎஸ்பி சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்ைட டிஎஸ்பியாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 ஆண்டுகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.