தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
* புதுக்கோட்டை – ஆவுடையார்கோவில், மணமேல்குடி
* சிவகங்கை – தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை
* ராமநாதபுரம் – போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை
* தென்காசி – ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்
* தூத்துக்குடி – ஆள்வார்திருநகரி
* விருதுநகர் – நரிக்குடி, திருச்சுழி
ஆகிய பகுதிகள் 2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!