பிப்ரவரி 26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை தொடங்க திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று திண்ணை பிரசாரத்தை திமுகவினர் தொடங்கினர். இதில் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடுவீடாக சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் துண்டறிக்கைகளை வழங்கி, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து விளக்கினர். மேலும் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகள், தமிழ்நாடு அரசின் 2024-25க்கான பட்ஜெட் சிறப்பம்சம் குறித்தும் விளக்கினர். மேலும் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளையும் எடுத்துரைத்தனர். மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து திமுகவினர் மேற்கொண்ட இந்த திண்ணை பிரசாரம் மக்களை ெவகுவாக கவர்ந்தது.