சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை பேசி வருகிறார். நாட்டின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை அடைய பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்தளித்த வழித்தடமே காரணம். தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன்.