சென்னை: ழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 3 பேர் கொண்ட பட்டியலுடன் டெல்லியில் முகாமிட்ட நிலையில் இன்று இறுதி செய்யப்பட்டு ராகுல்காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து இன்று இந்த பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிடுகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை முன்னதாகவே நிறைவு செய்து இன்று முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்ைத தொடங்குகிறார். கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மேலிடம் இன்று வெளியிடுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியுடன் சேர்த்து 290 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் வந்திருந்தன.
விருப்ப மனுக்கள் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் மற்றும் மேலிட பார்வையாளர்கள் குழு கலந்தாலோசித்து ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்ட உத்தேச பட்டியலைத் தயாரித்திருந்தனர். ந்த பட்டியலை இறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ற்று அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தலைமையில், கட்சியின் தமிழகத்துக்கான மேலிடப்பார்வையாளர்கள் அஜோய் குமார், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், செல்வப்பெருந்தகை மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் உத்தேச பட்டியலை அளித்தனர். தை தொடர்ந்து, வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து அவர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
மேலும், காங்கிரஸ் மேலிட தேர்வு குழு பட்டியலை இறுதி செய்வது குறித்து நேற்று ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து, ராகுல்காந்தி தலைமையில் இந்த வேட்பாளர் பட்டியல் இன்று காலை ஆலோசனை நடத்தப்பட்டது. ப்போது தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்த பட்டியலை இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரி-டாக்டர் செல்லக்குமார், கரூர்- ேஜாதிமணி, விருதுநகர்-மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய்வசந்த் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள 3 தொகுதிகளுக்கும், திருவள்ளூர்(தனி) தொகுதிக்கும் புதிதாக வேட்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திருவள்ளூர் தொகுதிக்கான ரேசில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், முன்னாள் எம்பி விஸ்வநாதன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத்தும் ஆகியோர் உள்ளனர். புதிதாக கிடைத்துள்ள திருநெல்வேலி தொகுதியில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. டலூர் தொகுதியில் கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் அய்யர் மகள் அல்லது டாக்டர் கலீல் ரகுமான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலுக்கு ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது.