சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு என்ன திட்டத்தை அறிவித்துள்ளது என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலமைச்சரின் கேள்வியை புரிந்து கொள்ளாமலேயே பதில் கூறியுள்ளார் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், உண்மைக்கு புறம்பாக அமித் ஷா பேசுகிறார், காங்கிரஸ் ஆட்சி பற்றி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய், மன்மோகன் சிங் போன்ற நேர்மையான, நியாயமான பிரதமராக, மோடியால் இருக்க முடியாது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் இதுவரை கட்டடம் கட்டப்படவில்லை என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.