சென்னை : புதிய தலைமை செயலக கட்டட வழக்கு தொடர்பான அரசின் மேல்முறையீடு மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடர்பாக பிறப்பித்த
அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து அப்போதைய அதிமுக ஆட்சியில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற முடிவு எடுத்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதிய தலைமை செயலக கட்டட வழக்கு தொடர்பான அரசின் மேல்முறையீடு மனுக்கள் மீது தீர்ப்பு தள்ளிவைப்பு
previous post