தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்ததன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவானதாகவும் அதில் 10,536 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜூலை வரை 10,589 மரண விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 11,106 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக மட்டும் 35லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்