சென்னை : தமிழ்நாட்டில் இன்று 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 2800 மெட்ரிக் டன் வெண்ணெய்யும், 4200 மெட்ரிக் டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.