தமிழகத்தில் 4 எஸ்பிக்கள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ் நாடு உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமணி திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த செல்வநாகரத்தினம் மவுன்ட் துணை கமிஷனராகவும், மவுன்ட்டில் இருந்த சுதாகர், திருவண்ணாமலை துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த பிரபாகர், தாம்பரம் மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது