தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு..!!

 

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு வரும் ஜனவரி 7, 8 தேதிகள் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கான பணிகள் தொடர் பணிகளாக நடைபெற்று வருகிறது. தொழில்துறை அதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணன் விருப்பத்தின் பெயரில் தான் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.-ஐ தற்போது வரை விடுவிக்கவில்லை. இதேபோல் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை