டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு வரும் ஜனவரி 7, 8 தேதிகள் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கான பணிகள் தொடர் பணிகளாக நடைபெற்று வருகிறது. தொழில்துறை அதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணன் விருப்பத்தின் பெயரில் தான் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.-ஐ தற்போது வரை விடுவிக்கவில்லை. இதேபோல் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.