இவரது பேச்சை நம்பி, கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜான்பாண்டியன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். பாஜக சின்னத்தில் 23 பேர் களம் கண்ட நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் பல கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது. இதை தேர்தல் ஆணையமும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இவ்வளவு செலவு செய்தும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ஆதரவு இருந்தும் தமிழ்நாட்டில் பாஜவால் ஓரு இடத்தை கூடப் பிடிக்க முடியவில்லை. பாஜ வெறும் 11.4 சதவீதம் வாக்குகள் மட்டும்தான் பெற்றுள்ளது. அண்ணாமலை வெற்றி பெறுவதாக கூறிய இடங்கள், வாக்கு சதவீதம் என அனைத்தும் கானல் நீரானதுதான் மிச்சம் என்று கட்சி தொண்டர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.