தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1-ம் தேதி முதல் அமல்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்ரல்.1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ம் தேதி சுங்கச் சாவடிகளிலும், செப்.1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஏப்.1-ம் தேதி முதல் கட்டண உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை

கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்க கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது: உச்சநீதிமன்றம்